மீண்டும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றம்! இவர்தான் ஆட்சியரா?

தற்போது ஒன்பது  மாவட்டங்களில் ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். இதன் மூலம் புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர், திண்டுக்கல், திருவள்ளூர், திருப்பத்தூர் போன்ற ஒன்பது மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  திருவாரூர் மாவட்ட ஆட்சியராக   நியமிக்கப்பட்டார் சாரு ஸ்ரீ ஐஏஎஸ்(T (Charusree IAS)) அவர்கள். திருவாரூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த  சாரு ஸ்ரீ  ஐஏஎஸ்,அவர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ள நிலையில்,  அவருக்கு பதிலாக சிவ சவுந்திரவள்ளி ஐஏஎஸ் அவர்கள் புதிய மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார்.திருவாரூர் மாவட்டத்தின் 33வது மாவட்ட ஆட்சியராக சிவ சவுந்தரவல்லி ஐஏஎஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது போனவார செய்தியாக இருந்தது.

new thiruvarur collector -

ஆனால் இப்போது மறுபடியும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டக் கலெக்டர் சிவ சௌந்தரவள்ளிக்குப் பதில், திரு.மோகனசந்திரன் இ.ஆ.ப., மாவட்டக் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் பணி சிறக்க திருவாரூர் இணையதலித்தின் மூலம் நாமும் வாழ்த்துவோம்.  

Leave a Comment