Thiruvarur New Collector Name – Thiru.V.Mohanachandran, I.A.S.,
தற்போது ஒன்பது மாவட்டங்களில் ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். இதன் மூலம் புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர், திண்டுக்கல், திருவள்ளூர், திருப்பத்தூர் போன்ற ஒன்பது மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார் சாரு ஸ்ரீ ஐஏஎஸ்(T (Charusree IAS)) அவர்கள். திருவாரூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த சாரு ஸ்ரீ ஐஏஎஸ்,அவர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சிவ சவுந்திரவள்ளி ஐஏஎஸ் அவர்கள் புதிய மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார்.திருவாரூர் மாவட்டத்தின் 33வது மாவட்ட ஆட்சியராக சிவ சவுந்தரவல்லி ஐஏஎஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது போனவார செய்தியாக இருந்தது.

ஆனால் இப்போது மறுபடியும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டக் கலெக்டர் சிவ சௌந்தரவள்ளிக்குப் பதில், திரு.மோகனசந்திரன் இ.ஆ.ப., மாவட்டக் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் பணி சிறக்க திருவாரூர் இணையதலித்தின் மூலம் நாமும் வாழ்த்துவோம்.
இன்று (31.01.2025) ஒன்பது மாவட்டங்களில் ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். இதன் மூலம் புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர், திண்டுக்கல், திருவள்ளூர், திருப்பத்தூர் போன்ற ஒன்பது மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார் சாரு ஸ்ரீ ஐஏஎஸ் அவர்கள்.திருவாரூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த சாரு ஸ்ரீ ஐஏஎஸ்,அவர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சிவ சவுந்திரவள்ளி ஐஏஎஸ் அவர்கள் புதிய மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.திருவாரூர் மாவட்டத்தின் 33வது மாவட்ட ஆட்சியராக சிவ சவுந்தரவல்லி ஐஏஎஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயிலில், 13/01/2025 இன்று, பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு தியாகராஜப்பெருமான் தனது திருவடிகளை காட்சிதரும் முக்கிய விழா.
மார்கழி விழாவின் நிறைவு நாளான இன்று. விழாவின் பயனாக பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு தியாகராஜப்பெருமான் தனது திருவடிகளை காட்சிதரும் முக்கிய விழா.

சூரியன் உதிக்கும் மங்கலமான காலைப்பொழுதில் கோடி சூரியர்களின் ஒளியையும் விஞ்சும் தியாகராஜப்பெருமான் தம் வலது திருவடியையும், உலகு அன்னையான கொண்டியம்மை தம் இடது திருவடியையும் காட்சிதர, சிவசக்தி ஐக்கிய வடிவமான முருகப்பெருமான் இருவருக்கும் நடுவே எழுந்தருளியிருக்கும் நிலையில், திருவிளமலில் இருந்து எழுந்தருளிய பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு காட்சி கொடுப்பார்கள்.

பொதுமக்கள் இன்று காலை 6 மணி அளவில் இருந்து ஸ்ரீ தியாகராஜ பெருமானின் திருவடி வணங்க காத்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
நன்னிலம் அருகே கோவில் திருமாளம் கிராமத்தில் மகாகாலநாதர் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி விழா நடைபெற்றது. முன்னதாக உலக மக்களின் நன்மைக்காக திறப்பு யாகம் நடைபெற்றது. மகாகாலநாதர், பயசாம்பிகை ராஜ மாதங்கி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாரதனை கண்டிக்கப்பட்டது. பின்னர் 15 அடி நீளத்திற்கு 50 லிட்டர் நெய் ஊற்றி நெய்குல தரிசனம் நடைபெற்றது.



திருவாரூர் கீழவீதியில் உள்ள பஞ்சின் மெல்லடியாள் சமேத துவாயநாதர் ஆலயத்தில் இன்று ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு காலையில் சிறப்பு அபிஷேகமும் மாலையில் காய்கறிகள் மற்றும் அன்னம் சாற்றி மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின் அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது
திருவாரூர் கீழவீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாணிக்க வள்ளி தாயார் உடனுறை கைலாசநாதர் திருக்கோவிலில் ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு இன்று 15 / 11/ 2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு அன்னாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் ஆன்மீக பெருமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.
திருவாரூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் வரும் நவ.16 (சனி) அன்று நடைபெற உள்ளது. இதனால் திருவாரூர், கூடூர், அலிவலம், ஓடாச்சேரி, சேந்தமங்கலம், விஜயபுரம், வாலவாய்க்கால், மாங்குடி, கூடூர், திருக்கணமங்கை, பெரும்பண்ணையூர், விளமல், ஈஃபி.காலனி, தென்றல் நகர், மாங்குடி, பவித்திரமாணிக்கம், அடியக்கமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
திருவாரூர் ஊராட்சி ஒன்றியம் மாங்குடி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 15.11.2024 இன்று ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் தொடக்க விழாவில் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் என 15 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் அவர்கள் உடன் இருந்தார்.
திருவாரூர் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், விஜயபுரம், நேதாஜி சாலை, பேபி டாக்கீஸ் ரோடு, விஆர்எம் ரோடு, வாழ வாய்க்கால், விளமல். பனகல் சாலை, மடப்புரம் வடக்கு வீதி, தெற்கு வீதி, கொடிக்கால் பாளையம், ஈபி காலனி, கிடாரம், கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது
பெற்றோரை இழந்த குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக மூலம் கண்டறிந்து, குடும்ப சூழ்நிலைகு ஏற்றவாறு பராமரிப்பு திட்டத்தின் மூலம் தத்தெடுக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்குமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண் 310, 3வது தளம், திருவாரூர் என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்.